Tuesday, September 25, 2018

Golden Age Transformation Yoga.

இந்த உலகம் உண்மையா? பொய்யா?,

இப்போது நீங்கள் இப்பதிவை படித்துக் கொண்டிருக்கும் செல் போன்  . Computer போன்றவைகளில் தகவல்கள்  எவ்வாறு பதியப்படுகின்றன?  செயல்படுகின்றன ?,  என்று சிந்தித்ததுண்டா 

 அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களுக்கும்  Software என்ற  ஒன்று உண்டு .Hardware என்ற ஒன்று உண்டு. இரண்டுமே வேலை செய்ய மின்சாரம் தேவை.

 இது நம் உடலுக்கும் பொருந்தும். உடல் --Hardware, மனம் --Software,   உயிர்-- மின்சாரம்

இதில் இரண்டு  நம் கண்களுக்கு தெரியாது .மனமாகிய  Software  ம்,
 உயிராகிய  Current  ம்  நம் கண்களுக்கு தெரியாது.

 உடலாகிய Hardware  மட்டுமே கண்களுக்கு தெரியும்.

 முழுக்க முழுக்க Software        என்பது ஒரு மாய விளையாட்டு .ஏனென்றால் எங்கிருக்கிறதென்றே தெரியாத ஒரு கண்கட்டு வித்தை.

ஆனால் தற்போது  அனைத்து 
Software  லும் 0 மற்றும் 1 என்ற
 இரண்டே செயல்படுகிறது. நீங்கள் தரும் அனைத்து தகவல்களும் 0 (அ)  1
  ஆக மாற்றி பதிவு செய்து கொள்கிறது.

  0, (அ ) 1   என்ற ஒன்றே  தன்னை பல கோடிக்கக்கான  விதங்களில்  வெளிப்படுத்திக் கொள்கிறது. ஆக எல்லா தகவல்களையும்  0  , 1 ஆக மாற்றி பதிவு செய்ய  முடியும்  என நவீன விஞ்ஞானம் கூறுகிறது.

0    , 1  என்பதை பைனரி டிஜிட்  (அ) பிட் என அழைப்பார்கள்.

 நீங்கள் பயன்படுத்தும்  Memory card  ல்   உள்ள MB, GB, TB (tera bit)  அனைத்துக்கும் அடிப்படை  இந்த பிட் (0  , 1) , (Bit) தான்.

  கண்ணுக்கு தெரியாத இந்த பிட்டில்  தான் நிறைய பேர் மாட்டிக் கொள்கிறார்கள்.

 மெமரி கார்டில்  ஒளி,ஒலி (Light,sound)  மட்டுமே, அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே  Store செய்ய முடியும்.
 
ஆனால் கண்ணுக்கே தெரியாத உயிரின் அடிப்படை அலகான செல்லில்  உள்ள ஜீன்களில், இப்பிரபஞ்சம் தோன்றியது முதல் உள்ள அனைத்து தகவல்களும் Store செய்யப்பட்டிருக்கிறதே. இது வியப்பில்லையா?,  மாயமில்லையா?

 அது மட்டுமல்ல   ஜீன்களில்      Light , sound  , taste,  smell , touch  என ஐந்தையும் Store செய்ய முடியும்
 
 ஒளி,ஒலி என்ற இரண்டை  வைத்துக் கொண்டு மனிதன் எவ்வளவு மாயம் காட்டுகிறான். 

ஆனால் சுவை, ஒளி, ஓசை, மணம், தொடு உணர்வு  ஆகிய ஐந்தை வைத்துள்ள இறைவன் எவ்வளவு மாயம் காட்டுவான்

  இந்த  ஐந்தையும் கொண்டு,  சூரியன் என்ற புரொஜக்டர் மூலம் , ஒவ்வொரு மனிதருக்கும், ஒவ்வொரு நொடிக்கும், ஒவ்வொரு விதமான காட்சியை , அவரவர்க்கு தக்கபடி  காட்டுபவர் யார்? 

அவரை பிரபஞ்ச இயக்குநர்  (universal director)  என்று கூறினால் என்ன தவறு?      இவை  மாயமில்லாமல்  வேறென்ன?   

ஆனால் இவை எல்லாமே  மனிதன் புலன்களில் சிக்காமல்,     தன்னை உணர்ந்து விடுதலை அடைவதற்காகவே.அதற்கான அறிவியல் பூர்வமான தொழில்நுட்பமே சித்தர்கள் வடிவமைத்து கொடுத்த வாசி யோகம்.

உயர்ந்த ஞானிகளும், யோகிகளும், சித்தர்களும் வாழ்ந்து புனிதப்படுத்திய திருவண்ணாமலையில் இந்த அரிய யோகமுறையை வாசி யோக மையம் வழங்குகிறது

இப்பிறவியிலேயே ஞானமடைந்து,மாயையை வென்று முக்தியை அடைய விரும்பும் அனைத்து ஆன்மீக ஆர்வலர்களும்  ±91 98843 80229 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு
 பயிற்சி பற்றிய முழுவிபரங்களை பெறலாம்


No comments:

Post a Comment